• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு!

selvan by selvan
July 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காரைதீவு, நிந்தவூர் மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்புகளில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்ட போதிலும், அவற்றின் விலைகள் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.

அடிக்கடி ஏற்படும் அசாதாரண காலநிலை காரணமாகத் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சில மீனவர்கள் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாகக் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் இத்தகைய தன்னிச்சையான விலை உயர்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இப்பகுதிகளில் மாரிகாலப் பருவமழை இன்மையினால் ஆறு மற்றும் குளங்களில் நன்னீர் மீன்களின் பிடிபாடு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, சந்தைகளில் கருவாடு வகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களின் பிரதான சந்தைகளில் மீன் வரத்து குறைவடைந்துள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதன் காரணமாகச் சில்லறைச் சந்தைகளிலும் மீன்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி, கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருப்பது போன்ற 3 மாத காலப் பகுதியில், எரிபொருள் நிரப்பு...

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

by selvan
July 6, 2026
0

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு...

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு

by selvan
July 6, 2026
0

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற...

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

by selvan
July 6, 2026
0

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை...

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

by Mathavi
July 6, 2026
0

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
July 6, 2026
0

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர்...

பேராசையால் திலீப பீரிஸ் தனது பதவியை இழப்பார் – உதய கம்மன்பில சாடல்!

by selvan
July 6, 2026
0

ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான 'வீர விக்ரம விபூஷண' விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப்...

வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!

வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!

by Mathavi
July 6, 2026
0

இலங்கையில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கு, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி