• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள்
0
பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

1,800 இற்கும் மேற்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்த தகவல் ஒன்றை கைதி ஒருவர் அதிகாரிகளுக்குக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வன்முறை வெடித்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று ஏற்பட்ட ஆரம்பக்கட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஆண் மற்றும் பெண் கைதிகள் குழுக்களாக சிறைச்சாலையின் கூரைகள் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் பெருமளவில் நேற்று இரவு களமிறக்கப்பட்டனர். நள்ளிரவளவில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்கவின் தகவல்படி, இன்று திங்கட்கிழமை காலை கைதிகளுக்கு உணவு விநியோகிக்கப்பட்ட போது, இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது கைதிகள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான அதிகாரிகளை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் வரை துரத்திச் சென்ற பெருமளவிலான கைதிகள், பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பியோட முற்பட்டுள்ளனர். வாயிலில் இருந்த அதிகாரிகள் அவர்களைத் தடுக்க முயன்ற போதும், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே, மேலதிகப் படையினர் வரவழைக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தேவையான குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்பட்டது. இதன்போது சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நாள் வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்குள் புகுந்து மருந்துகளைக் கொள்ளையடித்ததுடன், ஏனைய கட்டடங்களையும் உடைத்து, இரும்புப் பொருட்களைத் ஆயுதங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள் அகற்றப்பட்டன என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இன்று திங்கட்கிழமை காலையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கைதிகள், அவர்களின் கைபேசிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சிறைச்சாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் (பாதாள உலகக் குழுக்கள்) தொடர்புடைய 26 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பல்வேறு தாக்குதல்கள், கொள்ளைகள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தண்டனை பெற்றுவரும் ‘கட்டுல்லேகம சுரேஷ்’ என்ற கைதியே இந்த ஒட்டுமொத்த வன்முறையையும் திட்டமிட்டு வழிநடத்தினார் என்று பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் சந்தேகிக்கின்றன.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!

by Mathavi
July 6, 2026
0

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

மஹிந்த, ரணில் ஊன்றுகோலுடன் வந்தாலும் அரசியலை விடமாட்டார்கள்.!

மஹிந்த, ரணில் ஊன்றுகோலுடன் வந்தாலும் அரசியலை விடமாட்டார்கள்.!

by Mathavi
July 6, 2026
0

"நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பதற்கு பொதுமக்கள் தரப்பிலோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவிதப் பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால், தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும்...

மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். சாமிமலை பெயர்லோன் தோட்ட...

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

by Mathavi
July 6, 2026
0

கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 3 ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை...

தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!

தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!

by Mathavi
July 6, 2026
0

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசு, தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை...

சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!

சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!

by Mathavi
July 6, 2026
0

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன்...

டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!

டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!

by Mathavi
July 6, 2026
0

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன்...

மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!

மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!

by Mathavi
July 6, 2026
0

மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்‌ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில்...

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

by Mathavi
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி