கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 3 ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி வரை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அவர்களால் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நற்செய்தி கூட்டமும் நடைபெற்றது.
இத் திருவிழாவின் இறுதி நாளான ஜூலை 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் மற்றும் அருட் சகோதரிகள், அதிதிகள் வரவேற்கும் நிகழ்வைத் தொடர்ந்து, திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
அத்துடன் திருவிழா பாடல் மற்றும் பங்குத்தந்தையினால் திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தோனியாரின் திருச்சுரூபத்திற்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுன், மத பேதமின்றி அனைத்து மத மக்களும் கலந்து கொண்டதுடன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுக் குழுவினரால் மதிய உணவுகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.















