• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!

Mathavi by Mathavi
June 21, 2026
in இலங்கை செய்திகள்.
0
கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தென்மராட்சி, கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று (20.06.2026) சனிக்கிழமை இரவு மிக பிரமாண்டமான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

ஈழம் மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் நள்ளிரவு வரை நீடித்த இசைச் சங்கமமும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் விழாவிற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக, ஈழம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னணி தவில், நாதஸ்வர வித்துவான்கள் இணைந்து வழங்கிய விசேட இசைச் சங்கமம் நள்ளிரவு வரை அரங்கேறியது.

நாதஸ்வர இளவரசன் வட்டூர் N.R. தர்சனன் (சனா), நாதஸ்வர ஸ்வர வேந்தன் நாவலடிபூர் K. கயானன் ஆகியோர் தங்களது நாதஸ்வர இசையால் ஆலய வளாகம் முழுவதையும் பக்தி மழையில் நனையச் செய்தனர்.

தவில் நாத சொற்கலை வேந்தன் இணுவையூர் பா. நர்மதன் (மது), தவில் சொற்செல்வன் கோண்டாவில் R. சிவகரன், சொற்கவை இளவரசன் ஈழநல்லூர் பிரசாத் சச்சின், தவில் நாத இளவரசன் இணுவையூர் நர்மதன் பிரஜித், இசை நாத இளவரசன் ஈழநல்லூர் சிவதாசன் பவித்ரன் ஆகியோரின் அதிரடித் தவில் வாசிப்பு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த முன்னணி வித்துவான்களான V. சரவணன் மற்றும் S. சரவணன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு, இந்த இசை விழாவிற்கு மேலும் சர்வதேசத் தரத்தையும் பெருமையையும் சேர்த்திருந்தது.

இசைக் கச்சேரியைத் தொடர்ந்து, விழாவின் மற்றுமொரு விசேட அம்சமாக சிந்துபுரம் நாகப்பூ ஆற்றுகை கலைஞர்கள் வழங்கிய பாரம்பரிய “பொம்மலாட்ட” கலை நிகழ்ச்சி பக்திப்பூர்வமாக மேடையேற்றப்பட்டது. பழைமை மாறாத இந்த மரபுவழிக் கலைவடிவம், இளைய தலைமுறையினர் உட்பட அங்கிருந்த அனைத்துப் பக்தர்களின் பாராட்டுக்களையும் பெற்றது.

இவ்விழாவிற்கான ஒலியமைப்பு மற்றும் ஒளியமைப்பினை கச்சாய் K.K.A Sounds, Lights நிறுவனம் மிக உயர்தரமான முறையில் வழங்கியிருந்தது. மின்னொளி அலங்காரமும், துல்லியமான ஒலியமைப்பும் விழாப் பகுதிக்கு மேலதிக பொலிவைக் கொடுத்தன.

7ஆம் திருவிழா உபயகாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து, வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான அத்தனை வசதிகளையும் செம்மையான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணகி அம்மனின் அருள் வேண்டித் திரண்ட பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் நேற்று இரவு நடைபெற்ற இந்தத் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக நிறைவு பெற்றது.

Continue Reading

Related Posts

செம்மணியின் அவலம் – 400 ஐ தாண்டிய எலும்புக் கூடுகள்!

by selvan
June 21, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள்...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 21, 2026
0

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார...

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

by Mathavi
June 21, 2026
0

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!

by Mathavi
June 21, 2026
0

2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும், மாணவர் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில்...

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

by Mathavi
June 21, 2026
0

முல்லைத்தீவு - குணா கலைக் கல்லூரியின் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
June 21, 2026
0

நாடு முழுவதும் தற்போது மிகத் துரிதமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக 2026.06.15 முதல் 20.06.2026 வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 13...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹூங்கம, ரன்ன வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 53 வயதுடைய நபர்...

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு...

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) சடலமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி