மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்களின் கூற்றுப்படி, இன்று காலை (08) ம் திகதி 08.00 மணி நிலவரப்படி, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் முறையே 18 மற்றும் 12 அடியாக, நிரம்ப வேண்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 50% குறைந்த நிலையில் காணப்பட்டது.
மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள், தேசிய நீர்மின் அமைப்பின் லக்ஷபானா, நியூ லக்ஷபானா, பொல்பிட்டியா, விமலசுரேந்திரா, கென்யோன் மற்றும் போர்டுலேண்ட் மின் நிலையங்களுக்கான முக்கிய நீர் சேமிப்பு நீர் தேக்கங்களாகும்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது.










