யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்று அதிகாலை வரை உறங்கம் இல்லாமல் இருந்துள்ளார். இதன்போது அவரது தாயார் மற்றும் மனைவியும் உடனிருந்தனர்.
பின்னர் அதிகாலை 3.00 மணியளவில் தான் உறங்கப்போவதாகவும், அவர்களையும் உறங்குமாறு கூறிய நிலையில் அவர்கள் உறக்கத்துக்கு சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்தில் கண் விழித்த தாயார் தனது மகனை காணவில்லை என தேடியபோது வீட்டினுள் சடலமாக தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
அதனை தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், மல்லாகம் நீதிமன்ற நீதிவானும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை பார்வையிட்டார்.










