• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

selvan by selvan
June 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தியும், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உணர்ச்சிப் பூர்வமாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர்.

“இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே உங்களையும் கைது செய்வோம்” எனப் பொலிஸார் மிரட்டியிருந்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாது பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் மற்றும் சிவில் சமூகத் தரப்பினர், எவ்வித அடிப்படைகளுமின்றிப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதைக் கடுமையாகக் கண்டித்தனர். அத்துடன், எவ்விதக் குற்றமுமற்ற பாடகர் சங்கீத் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதைப் பாதுகாப்புத் தரப்பினரும் தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Posts

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

by selvan
June 8, 2026
0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில்...

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல்...

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

by selvan
June 8, 2026
0

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை...

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

by selvan
June 8, 2026
0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு...

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

by selvan
June 8, 2026
0

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்"...

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

by selvan
June 8, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப்...

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

by selvan
June 8, 2026
0

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 3 நாள்கள் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம்...

இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

by selvan
June 8, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டு...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

by selvan
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி