• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

selvan by selvan
June 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!
Share on FacebookShare on Twitter

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 3 நாள்கள் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் இந்த விசேட தூய்மைப்படுத்தல் மற்றும் சோதனையிடும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வைத்தியர் கபில கன்னங்கர,

“கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், நாட்டின் 14 மாவட்டங்களிலுள்ள 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50% முதல் 55% வரை அதிகரித்துள்ளதுடன், இதுவரை 20 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள், தென் மாகாணத்தில் மாத்தறை, காலி மாவட்டங்கள், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நோய் பரவல் தற்பொழுது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட லார்வாப் புழுக்கள் தொடர்பான ஆய்வுகளின்படி, மனிதர்களால் கைவிடப்படும் மற்றும் அலட்சியமாக வீசப்படும் பொருள்களிலேயே டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பெருகுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாகப் பாடசாலை வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் வீட்டு வளாகங்கள் ஆகியவற்றில் நுளம்புப் பெருக்கம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் கோப்பைகள், இளநீர் கோம்பைகள், வெற்று டின்கள் மற்றும் பொலித்தீன் பைகள் போன்ற 10 மில்லிலீற்றருக்கும் அதிகமான சுத்தமான நீர் தேங்கி நிற்கக்கூடிய எந்தவொரு இடத்திலும் ‘ஈடிஸ்’ வகை நுளம்புகள் பெருகுகின்றன.

கடந்த வருடத்தில் ‘டெங்கு வைரஸ் வகை 3’ அதிகமாகக் காணப்பட்ட நிலையில், இவ்வருடம் ‘டெங்கு வைரஸ் வகை 2’ மிக வேகமாகப் பரவி வருகின்றது.

இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படுவதால், நோய் உடனே தீவிரமடையும் அபாயம் உள்ளது. இது கடுமையான குருதிப்போக்கு மற்றும் அதிர்ச்சி நிலை போன்ற உயிராபத்தான நிலைகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.” – என்றார்.

இன்று காலை ஆரம்பமான விசேட சோதனை நடவடிக்கைகளில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படைகளின் சிப்பாய்கள், சுற்றாடல் பொலிஸார் மற்றும் புகை விசிறல் உதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தலா மூன்று பேரைக் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, கொழும்பு பொது வைத்தியசாலை வளாகம், மருதானை, பொரள்ளை போன்ற மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வளாகங்களை இக்குழுவினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த விசேட களப்பணி அடுத்த இரண்டு நாள்களுக்கும் தொடரவுள்ளதுடன், இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் 100 முதல் 200 மீற்றர் தூரம் வரை பறக்கக்கூடியவை என்பதால், பொதுமக்கள் தமது வீடு மட்டுமன்றி அருகிலுள்ள பாழடைந்த காணி மற்றும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வாரத்தில் 30 நிமிடங்களை ஒதுக்குமாறு வைத்தியர் கபில கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மூன்றாவது நாளில் உடனடியாகத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடுமாறு அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாமதமாகச் சிகிச்சையளிப்பதே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதால், இரத்தப் பரிசோதனை மூலம் அது டெங்கு காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Related Posts

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

by selvan
June 8, 2026
0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில்...

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம்!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல்...

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

by selvan
June 8, 2026
0

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை...

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

by selvan
June 8, 2026
0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு...

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

by selvan
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல்...

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

by selvan
June 8, 2026
0

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்"...

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

சுரேஷ் சலேவுக்குப் பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு

by selvan
June 8, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப்...

இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே டயஸ்போராக்களின் தேவை!

by selvan
June 8, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டு...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

by selvan
June 8, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி