• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!

selvan by selvan
June 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!
Share on FacebookShare on Twitter

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் மறைமுக முயற்சி குறித்து, உடனடியாக விளக்கமளிக்குமாறுப பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அரசமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும்.

அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்வதாயின், அது அரசமைப்பில் செய்யப்படும் திருத்தத்தின் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசு அறியாதிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

தற்போதைய அரசு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில், புதிய அரசமைப்பு ஒன்று வரைவு செய்யப்படுவதுடன், அது நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய தற்காலிகத் திருத்தங்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கடுமையான குரலெழுப்பியது தற்போதைய அரசின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆவர்.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்திய தற்போதைய ஆட்சியாளர்கள், தங்களது கடந்தகாலக் கூற்றுகளுக்கும் தற்போது தாங்கள் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த முன்மொழிவின் மூலம் அரசு அரசமைப்பைத் தெளிவாக மீறுவதுடன், சட்ட அமைப்பின் தொடர்ச்சித்தன்மை, சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு திருத்தத்தின் மூலம் அரசு எதனை எதிர்பார்க்கின்றது? தற்போதைய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து பதவியேற்கத் தகுதியற்றவர்கள் என்றா? அல்லது ஏதேனும் இலக்கு வைக்கப்பட்ட ஒரு நபர் அல்லது சில நபர்களின் குறுகிய தேவைகளை நிறைவேற்றி, அதன் மூலம் நீதித்துறைக்கு மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துவதா? இக்கேள்விகள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களாகும்.

அதேபோன்று, அரசு இதன் மூலம் தகுதியுடைய, பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்ட நீதிபதிகளுக்கான அக்காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கித் தள்ளிப்போடுவது கடுமையான அநீதியாகும். இது அரசமைப்பின் 28ஆம் பிரிவின் கீழ் அடிப்படைப் கடமைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள (உ) உப பிரிவை தெளிவாக மீறும் செயலாகும். அதனூடாகப் பிறரின் உரிமைகளையும் பல்வேறுபட்ட சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையான அரசமைப்புத் திருத்தமொன்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டு, தங்களது சுய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாத்திரம் அரசமைப்பில் இத்தகைய திருத்தங்களைக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். சட்டத்தின் இறைமை, சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டுத் தலையீடு இத்தருணத்தில் அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்துடன் நாங்கள் முழுமையாக உடன்படுகின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடனடியாக இந்த முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும் எனவும், மக்களின் இறையாண்மைக்குச் சவால் விடுக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Related Posts

கோட்டாவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்!

கோட்டாவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்!

by selvan
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தற்போதைய அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்...

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்!

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்!

by selvan
June 3, 2026
0

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும், பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களது தேசிய...

யாழ்ப்பாணத்தில் உழவியந்திரம் மோதி பாதசாரி பலத்த காயம்: ஓட்டுநர் உரிமம் இல்லாத சாரதியால் விபத்து

யாழ்ப்பாணத்தில் உழவியந்திரம் மோதி பாதசாரி பலத்த காயம்: ஓட்டுநர் உரிமம் இல்லாத சாரதியால் விபத்து

by selvan
June 3, 2026
0

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர், பின்னால் வந்த உழவியந்திரத்தால் மோதுண்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் ஏற்பாடு: வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு!

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் ஏற்பாடு: வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு!

by selvan
June 3, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்....

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

by selvan
June 3, 2026
0

நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது....

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

by selvan
June 3, 2026
0

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை...

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

by selvan
June 3, 2026
0

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

by selvan
June 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பண மோசடி...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

by Mathavi
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 3, 2026
0

பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி