• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!

selvan by selvan
June 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!
Share on FacebookShare on Twitter

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் மறைமுக முயற்சி குறித்து, உடனடியாக விளக்கமளிக்குமாறுப பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அரசமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும்.

அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்வதாயின், அது அரசமைப்பில் செய்யப்படும் திருத்தத்தின் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசு அறியாதிருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

தற்போதைய அரசு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில், புதிய அரசமைப்பு ஒன்று வரைவு செய்யப்படுவதுடன், அது நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய தற்காலிகத் திருத்தங்களுக்கு எதிராகக் கடந்த காலத்தில் கடுமையான குரலெழுப்பியது தற்போதைய அரசின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆவர்.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்திய தற்போதைய ஆட்சியாளர்கள், தங்களது கடந்தகாலக் கூற்றுகளுக்கும் தற்போது தாங்கள் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த முன்மொழிவின் மூலம் அரசு அரசமைப்பைத் தெளிவாக மீறுவதுடன், சட்ட அமைப்பின் தொடர்ச்சித்தன்மை, சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு திருத்தத்தின் மூலம் அரசு எதனை எதிர்பார்க்கின்றது? தற்போதைய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் அடுத்தடுத்து பதவியேற்கத் தகுதியற்றவர்கள் என்றா? அல்லது ஏதேனும் இலக்கு வைக்கப்பட்ட ஒரு நபர் அல்லது சில நபர்களின் குறுகிய தேவைகளை நிறைவேற்றி, அதன் மூலம் நீதித்துறைக்கு மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துவதா? இக்கேள்விகள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களாகும்.

அதேபோன்று, அரசு இதன் மூலம் தகுதியுடைய, பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளைக் கொண்ட நீதிபதிகளுக்கான அக்காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கித் தள்ளிப்போடுவது கடுமையான அநீதியாகும். இது அரசமைப்பின் 28ஆம் பிரிவின் கீழ் அடிப்படைப் கடமைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள (உ) உப பிரிவை தெளிவாக மீறும் செயலாகும். அதனூடாகப் பிறரின் உரிமைகளையும் பல்வேறுபட்ட சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையான அரசமைப்புத் திருத்தமொன்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டு, தங்களது சுய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாத்திரம் அரசமைப்பில் இத்தகைய திருத்தங்களைக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். சட்டத்தின் இறைமை, சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டுத் தலையீடு இத்தருணத்தில் அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கத்துடன் நாங்கள் முழுமையாக உடன்படுகின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடனடியாக இந்த முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும் எனவும், மக்களின் இறையாண்மைக்குச் சவால் விடுக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Related Posts

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

by Mathavi
June 7, 2026
0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற...

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
June 7, 2026
0

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி