யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீபன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இப்பணியை ஆரம்பித்து வைத்தார்.
மருதங்கேணி பிரதேச செயலாளர் திருமதி உஷா ராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருதங்கேணி திட்டமிடல் பணிப்பாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான திரு. ரமணன், திரு. ஷாம், திருமதி. பிரிதா மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள், கடற்தொழில் பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பொற்பதி கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொற்பதி கடற்தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீபன் அவர்கள் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தார்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை விரைந்து பெற்றுத் தருவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.
இறால் குளம் தூர்வாரப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கடற்தொழில் நடவடிக்கைகளும் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.













