• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

Mathavi by Mathavi
May 26, 2026
in இலங்கை செய்திகள்.
0
இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!
Share on FacebookShare on Twitter

“நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத் திறமையற்ற அரசைக் கவிழ்க்க வேண்டிய தேவை எமக்கில்லை, இவர்களின் நிர்வாகச் சீர்கேட்டினால் மக்களே இவர்களை விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார பதிலடி கொடுத்துள்ளார்.

ஆளுந்தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது என எதிர்க்கட்சிகள் பொய் கூறுகின்றன என்று ஆளுந்தரப்பு குறிப்பிடுவதை ரஞ்சித் மத்தும பண்டார கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் ஒருவேளை உண்பதற்கே வழியின்றித் தவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை, மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது, எரிபொருட்களின் விலையும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இது நாங்கள் கூறும் பொய் அல்ல, நாட்டு மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் நிஜமான கண்ணீர். மக்களின் இந்த அவல நிலையை மறைக்கவே ஆளுந்தரப்பு எம் மீது பழிபோடுகின்றது.

அரசுக்கு இருக்கும் மூன்றிலிரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மை பலம் குறித்து ஆளுந்தரப்பு பெருமை பேசுகின்றது. இந்த அரசு மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றார்கள் இல்லை.

ஒரு வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தேர்தலைக் காலவரையறையின்றி பிற்போடுகின்றார்கள். அரசில் இல்லாதவர்கள் 2027 இல் தான் தேர்தல் நடக்கும் என்கிறார்கள்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் என்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கோ அல்லது எதிர்க்கட்சிகளைத் திட்டுவதற்கோ அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஜனநாயகப் பாதையிலேயே பயணிக்கும் ஒரு கட்சி. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய தேவை எங்களுக்குக் கிடையாது.

நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் தற்போதைய கடுமையான நெருக்கடி நேரத்தில் நாட்டைப் பாராமரிப்பதை விட்டுவிட்டு, ஒருவர் வெளிநாட்டுப் பயணங்களிலும், மற்றவர் சுற்றுலாத் தலங்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்தத் தொலைநோக்கற்ற, திறமையற்ற நிர்வாகமே இந்த அரசை வீழ்த்தப் போதுமானது. எனவே, குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கில்லை. மக்களின் பேராதரவுடன் முறையான ஜனநாயகத் தேர்தல் மூலமே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.” – என்றார்.

Related Posts

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

by selvan
May 26, 2026
0

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு, கஹதுடுவ - தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று...

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

by Mathavi
May 26, 2026
0

2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...

விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாண்டுவ - மொனராகலை வீதியின் 282ஆம் மைல்கல்...

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

by Mathavi
May 26, 2026
0

சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும்,...

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

by Mathavi
May 26, 2026
0

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி