• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

Mathavi by Mathavi
May 26, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள், முக்கிய செய்திகள்
0
சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று மாலை செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் தவிசாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலக கூட்ட மண்டபத்திற்குள் நுழைந்து பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் உள்ளிட்டோரிடம் கையளித்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்திகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் விசேட பொலிஸ் குழுக்களை ஏற்படுத்தி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் இது தொடர்பில் செயற்படும் பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதை தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக சட்டவிரோத மதுபான உற்பத்தி, விவசாய பிரச்சினை, காட்டு யானைப் பிரச்சினை, குப்பை மேட்டுப் பிரச்சினை குடிநீர்த் பிரச்சினை, வீதிப் பிரச்சினை, வாள்வெட்டு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

Related Posts

பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 26, 2026
0

அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரெனத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

by Mathavi
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இவ்விபத்துச் சம்பவம் குருநாகல்,...

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 26, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி