• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துகளை விநியோகம் செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து.!

Mathavi by Mathavi
April 27, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துகளை விநியோகம் செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து.!
Share on FacebookShare on Twitter

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்து விநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முழுநாடும் ஒன்றாக என்னும் தேசிய போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மருந்தகங்கள் ஊடாக போதைப்பொருளுக்கு சமனான மருந்துகளை மாணவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவல்கள் திணைக்களம் ஊடாக மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் விழிப்புணர்வு அறிவுறுத்தல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் இந்த செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பணியக உத்தியோகத்தர் டினேஸ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் அச்சுதன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மருத்துவரின் சிபாரிசுடன் வருவோருக்கு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சிபார்சு செய்துள்ள வைத்தியர் அதற்கு தகுதியுடையவரா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்பதுடன் சிபார்சு செய்துள்ள வைத்தியர் உண்மையான வைத்தியரா என்பது தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மருந்துகள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டன.

வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் மருந்துகளின் துஷ்பிரயோகங்களை தடுப்போம், முழுநாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஆகியவை அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இதன்போது போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சுகாதார பணிப்பாளர்,
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு மருந்தகங்களிலும், தனியார் மருந்தகங்களிலும் சரியான மருந்துகளை எவ்வாறு வழங்குவது மற்றும் வைத்தியர்களின் பரிந்துரையின்படிதான் அது வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அதற்குரிய சரியான பெயர், சரியான அளவுகளில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான வைத்தியரின் கையெழுத்து தானா? அந்த வைத்தியர் அந்த பரிந்துரையை செய்வதற்கு தகுதியுடையவரா என்பது சம்பந்தமாக விழிப்புணர்வு தனியார் மருந்தகங்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

அதே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி, இலங்கையிலும் சரி போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற இந்த தருணத்தில், அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மருந்தகங்களில் இருக்கின்ற சில போதை தரக்கூடிய சில மருந்துகள், வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் போதையை ஏற்படுத்துவதற்காக சிலரால் தவறாக பயன்படுத்தப்படும் ஒரு அபாய நிலைமை காணப்படுகிறது.

ஆகவே ஒரு பக்கம் போதைப்பொருள் பாவனையை தடுக்கின்ற இறுக்கமான நடைமுறைகள் காணப்படுகின்ற இந்த நேரத்தில், அதனை பெற்றுக்கொள்ளாதவர்கள் அதற்கு மாற்றாக தனியார் மருந்தகங்களில் உள்ள சில மருந்துகளை வைத்தியர்களின் பரிந்துரை இல்லாமல் அல்லது வைத்தியர்களின் பரிந்துரையை தங்களால் திருத்தி அல்லது தகுதியற்ற சில போலி மருத்துவர்களின் பரிந்துரை சீட்டுகளை பாவித்து இந்த மருந்துகளை பெற்றுக்கொள்ளும் அபாயம் மிகப்பாரியதாக காணப்படுகின்றபடியால், அது சம்பந்தமான விழிப்புணர்வை நாங்கள் செய்து வருகின்றோம்.

இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதன் மூலமாக போதைப்பொருள் பாவனைகளை ஊக்குவிக்கிற சில கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு எங்களுடைய பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் இதற்கு பொறுப்பாக இருக்கின்ற எங்களுடைய பிராந்திய பொறுப்பதிகாரி அவர்கள், அதேபோல மட்டக்களப்பு மாநகர சுகாதார அதிகாரி அவர்கள், அவர்களுடைய அணியினர் சேர்ந்து 21 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை, மாணவர்களை தவறான வழியில் போதைப்பொருளுடன் கலந்து பாவித்து தவறாக வழிநடத்துபவர்களை தடை செய்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றோம்.

மாநகர சபையும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் சிகரெட் விற்பனையற்ற பிரதேசமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறாவூரிலும் அதேபோல ஏறாவூர் நகரசபை ஏறாவூர் பிரதேச செயலகம் சேர்ந்து மிகச்சிறப்பாக அந்த சிகரெட் அற்ற ஒரு வலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல மட்டக்களப்பு நகரப் பகுதியிலும் உருவாக்குகின்ற வகையில் நாங்கள் மாநகர சபையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்படுத்தி வருகின்றோம். நிச்சயமாக அது எவருக்குமே சிகரெட் வழங்கக்கூடாது என்பதொரு கருத்தை நாங்கள் மாநகர சபையோடு சேர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

அதே வேளை 21 வயதிற்குட்பட்ட பிள்ளைகளை தவறான வழியில் திருப்புகின்ற கடைக்காரர்களை அடையாளம் காண்பதும், அவர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்திய சுகாதார அதிகாரிகள் அல்லது பிராந்திய சுகாதார பணிமனைக்கு அறியத்தந்து அதன் மூலமாக எங்களுடைய சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை பொதுமக்களிடம் இருந்தும் நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

“போதைப்பொருள் பாவனைகளை ஒழிக்கின்ற வினைத்திறனாக இந்த அரசாங்கம் ஒழித்துக் கொண்டு வருகின்ற காலகட்டத்தில், தனியார் மருந்தகங்களில் இந்த போதைப்பொருள் பாவிப்பவர்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்கின்ற அந்த முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் நாங்கள் இது ஒரு முதற்கட்டமாக கடந்த வாரம் எல்லா தனியார் மருந்தகங்களோடும் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி இருந்தோம். எல்லா தனியார் மருந்தகங்களும் மிகப்பாரிய ஒத்துழைப்பை தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். அவர்களுடைய உறுதியை எங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள். அதே நேரத்தில் அவர்கள் இந்த விழிப்புணர்வையும் விழிப்புணர்வு மூலமாக அவர்கள் மிகவும் கட்டுப்பாடாக, மிகவும் சரியான முறையில் வைத்தியர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, சரியான பரிந்துரை சீட்டு இனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

பரிந்துரைகளில் பிழையாக பரிந்துரைப்பவர் அல்லது சில மருந்துகள் வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்படலாம், சில மருந்துகள் வைத்தியர் பரிந்துரைக்கலாம், சில மருந்துகளை ஆயுர்வேத வைத்தியர்கள் சில ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது நடைமுறையில் கொண்டு வராத விடயம். இப்படி பல பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை எல்லாவற்றையும் சரியாக கைக் கொள்ளும் இடத்து நாங்கள் பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு நாங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை, போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்கலாம்.

Related Posts

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 25, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

by selvan
May 25, 2026
0

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

by selvan
May 25, 2026
0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த...

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

by selvan
May 25, 2026
0

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

by selvan
May 25, 2026
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பத்தரமுல்லையில் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி