• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
April 7, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

“நாட்டின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய QR கொடுப்பனவு முறைமைக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய QR முறைமையை மக்களுக்கு மிகவும் எளிதானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றுவதில் வங்கி முறைமைக்கு உள்ள பொறுப்புகளை ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

இத்திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஏற்படும் தடைகளை நீக்கி, சமூகத்தில் இதனை விரைவாகப் பிரபலப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
“ATM இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது வங்கி முறைமைக்கு அதிக செலவு ஏற்படுகின்றது. புதிய டிஜிட்டல் முறைமைக்கு மக்கள் மாறும் போது இந்தச் செலவுகளைப் பெருமளவு குறைக்க முடியும். இது பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியின் பதில் பொது முகாமையாளர் வை.ஏ. ஜயதிலக்க பேசுகையில், இணையவழி பணப்பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் இந்தப் புதிய டிஜிட்டல் பொருளாதாரப் பயணத்திற்கு வங்கித் துறை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நேஷனல் வங்கி உள்ளிட்ட முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி