உலக வரலாற்றிலேயே மிகக் கடுமையான இணைய முடக்கங்களில் ஒன்றை ஈரான் தற்போது எதிர்கொண்டு வருகிறது.கடந்த ஜனவரி 8ஆம் திகதி முதல், ஈரானில் முழுமையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 9.2 கோடி மக்கள் இணையம், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி சேவைகளின்றி தவித்து வருகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், அரசின் அடக்குமுறைகள் குறித்து சர்வதேச கவனம் செல்லாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதற்குப் பதிலளித்த ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, வெளிநாடுகள் வழிநடத்தும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாகவே இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இணைய சேவைகள் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து ஈரான் அரசு இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.ஆனால், ஜனவரி 15ஆம் திகதி IranWire வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புத்தாண்டான மார்ச் இறுதி வரை சர்வதேச இணைய அணுகல் வழங்கப்படாது என அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமே மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.










