அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில் வழிபாடுகள் நடந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பள்ளிவாசலுக்குள் நுழைந்த இருவர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலையின் இரு ஊழியர்கள் என மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் அறிந்து குறித்த இடத்துக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடி வந்த நிலையில், குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன் மற்றும் 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு செய்துள்ளனர்.
இவ்வாறு உயிர்மாய்த்துக் கொண்டவர்கள் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










