புதிய கோவிட் – 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, சுகாதார அமைச்சு சில வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பி. சி. ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் தற்போது கோவிட் – 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், காய்ச்சலுக்காக வைத்தியசாலைகளில் சேரும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் அனில் ஜாசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.