• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

Mathavi by Mathavi
May 24, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் சந்திப்பில் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் வடக்கு, கிழக்கு மாகாண மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, “வடக்கு மாகாணத்தில் காணிகளைச் சுவீகரிப்பது தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற வேண்டும். பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் வேறுபடுத்துவது என்பது கடினமான காரியம். காணிகளின் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். நாட்டில் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் அவர்களில் பலர் நாடு திரும்ப முடியாத நிலையிலுள்ளனர். வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியதன்படி பல காணிகள் கரையோரத்திலுள்ளன. 2004இல் ஏற்பட்ட சுனாமியால் பலரின் ஆவணங்கள் அழிவடைந்து போய்விட்டன. எனவே, இந்த வர்த்தமானியை மீளப் பெறவேண்டும்.” – என்று வலியுறுத்தியதுடன், அதிலுள்ள சட்டப் பிரச்சினைகளையும் இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நிஷாம் காரியப்பர்ஆகியோர் முன்வைத்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து,“அரசு அடாத்தாகக் காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே வழங்க வேண்டும்.” – என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. கூறினார்.

தொடர்ந்து, வவுனியா மாவட்டத்தில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் ப.சத்தியலிங்கம் எம்.பியும், திருகோணமலை மாவட்டத்தில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் ச.குகதாசன் எம்.பியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் து.ரவிகரன் எம்.பியும் கூறினர்.

எனினும்,இடையிலேயே இதனை நிறுத்திய பிரதமர்,”பிரதானமாக வடக்கில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட காணி தொடர்பில் பேசவே இந்தச் சந்திப்பு கூட்டப்பட்டது. நேரத்தைக் கருத்தில்கொண்டு அது தொடர்பிலேயே கலந்துரையாடுவோம்.” – என்று கூறினார்.

இதனிடையே, சந்திப்பில் பங்கேற்றிருந்த காணி, திணைக்களங்களின் அதிகாரிகள் வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என்ற கருத்தைக் கடுமையாக எதிர்த்தனர். “காணி ஆவணங்கள் இல்லையென்றால் மின் பட்டியல், வரி தொடர்பான ஆவணங்கள் அல்லது வேறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையேனும் மக்கள் ஆதாரமாகக் காட்ட முடியும்.” – என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலையிலுள்ளவர்கள் மெய்நிகர் வழியில் தொடர்பு கொள்ள முடியும். கிராம சேவகர் மூலம் காணியை உறுதிப்படுத்தலாம். உறவினர்கள் ஊடாக காணி ஆவணத்தை சமர்ப்பிக்க முடியும். எனவே, வர்த்தமானியை மீளப்பெற முடியாது.” – என்றும் அவர்கள் கூறினர்

இதன்போது, “100 வருடங்களுக்கு முந்தைய காணிகளை அடையாளப்படுத்த இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது. அப்படியானால் தற்போதைய ஆவணங்கள் ஏற்கப்படுமா? அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளப்படுத்தவே இந்த நடைமுறை என்றால் எதற்காக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமல் 3 மாத காலத்துக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்த விடயத்தை வெளிப்படுத்திய பின்னர்தான் இந்த விடயம் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது. மக்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் என்ன?.” என்று கஜேந்திரகுமார் எம்.பி., நிசாம் காரியப்பர் எம்.பி. ஆகியோர் அதிகாரிகளைக் கேட்டனர். அவர்களின் இந்தக் கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, “பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. பொதுமக்களின் காணிகளிலிருந்து அரச காணிகளை வேறுபடுத்துவதே நோக்கம். அரச காணிகளில் பொது நோக்கிலான அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படும்” – என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி, “இந்த வர்த்தமானி தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் – அமைச்சரவையில் பேசி முடிவு ஒன்று எட்டப்படும். அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது மீண்டும் உங்களை (வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை) சந்திக்கும்போது பதிலளிக்கின்றேன்.” – என்று உறுதியளித்தார்.

Related Posts

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

by Thamil
June 17, 2025
0

வைத்தியசாலை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூன்று சந்தேக...

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

by Thamil
June 17, 2025
0

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர்...

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

இன்று (17) மாலை இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது...

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

முல்லைத்தீவு - வண்ணங்குளம் ஜி.என் பிரிவில் புதர்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தீ பரவியுள்ள இடமானது பனை மரங்களுக்கு அருகில் உள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையைப்...

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
June 17, 2025
0

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் இன்று (17) எரிபொருள் தாங்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு...

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

யாழில் உணவு அருந்திவிட்டு இருந்த இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் எனோ...

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி