யாழில் மனவிரக்தியடைந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கதிர்வேல் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
காங்கேசன்துறை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.