1821
கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் துருக்கியருக்கு எதிராக இடம்பெற்றது.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் பாடன் ரூச்சைக் கைப்பற்றின.
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.
1881
துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1888
தென்கிழக்காசியாவில், வடக்கு போர்னியோ பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1922
20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
1926
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட நோர்ச் வான்கப்பல் வட முனைக்கு மேலாகச் சென்ற முதலாவது வானூர்தி ஆகும்.
1937
ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.
1941
உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3 அறிமுகப்படுத்தப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க எண்ணெய்க் கப்பல் வர்ஜீனியா மிசிசிப்பி ஆற்றில் ஜேர்மானிய யூ-507 நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1949
பனிப்போர்: சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1965
சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
1978
சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
1981
ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
1982
போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1998
இந்தோனேசியாவில் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு கலவரங்கள் ஆரம்பமாயின.
2002
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு கியூபா வந்தார்.
2003
ரியாத் நகரில் அல் காயிதா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006
பிரேசில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
2008
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
2010
லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.
2015
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
2017
கணணி வைரஸ் உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.




