1812
லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1833
பிரித்தானியாவின் லேடி ஒஃப் த லேக் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து தீவுக் கரையில் பனிமலை ஒன்றின் மீது மோதி மூழ்கியதில் 265 பேர் உயிரிழந்தனர்.
1846
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ஜேம்ஸ் போக் மெக்சிக்கோ மீது போரை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மே13 இல் போருக்கு அனுமதி கிடைத்தது.
1857
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1858
மினசோட்டா அமெரிக்காவின் 32வது மாநிலமாக அனுமதிக்கப்பட்டது.
1891
ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு ஜப்பானியக் காவல்துறையினரின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.
1905
அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924
மெர்சிடிஸ் – பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.
1945
இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது ஜப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற் கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
1949
சியாம் நாடு தாய்லாந்து என இரண்டாவது தடவையாகப் பெயர் மாற்றம் பெற்றது.
1953
டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960
முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1972
ஐக்கிய அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நெவாடாவில் நடத்தியது.
1985
இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.
1995
170 நாடுகள் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1996
எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
1996
மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து வீழ்ந்ததில் அனைத்து 110 பயணிகளும் உயிரிழந்தனர்.
1997
ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998
இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
2011
எசுப்பானியாவில் லோர்க்கா என்ற நகரில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
2013
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2014
காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கின்சாசா நகரில் காற்பந்து விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தனர்.



