பதுளை பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை – உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சிறுமி நேற்றைய தினம் இரவு திடீரென சுகயீனமுற்று பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகவும், சிறுமியின் மரணம் குறித்து சந்தேகிப்பதாகவும் வைத்தியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.