கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழரசுக்கட்சி காட்டியது.இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழரசுக்கட்சி அமோக ஆதரவுடன் வெற்றிபெறும் என இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் இன்று காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.
இதேபோன்று பல்வேறு கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமது வாக்குகளை பதிவுசெய்ததை காணமுடிந்தது.