முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவிற்கான தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரை பற்று,துணுக்காய், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு இந் நான்கு பிரதேச சபைகளுக்கான கட்சிகளும் சுயேட்சை குழுக்களுமாக 38 அமைப்புக்கள் போட்டி இடுகின்றன இதில் மாவட்டத்தில் 87800பேரும் தபால் மூலம் 3807பேரும் வாக்களிக்க தகுதி உள்ளனர் அந்த நிலையில் 137 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணியில் இருந்து பொது மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றார்கள் இதில் 274 போலிஷ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். இது வரைக்கும் எந்தவித அசம்பாஷங்களும் நடைபெறவில்லை நேர்மையாகவும் நீதியாகவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

