ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவனொருவன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தான்.
அத் தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதே வேளை சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.