பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் 17 வயதுதுடைய சிறுவன் ஒருவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக் கொண்ட விதுசன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். மேலும் இச்சிறுவன் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் எனத் தெரியவந்துள்ளது . தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT