1879
யாழ். கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பலானது.
1986
கொழும்பு விமான நிலையத்தில் எயர்லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.
1808
சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது.
1808
முதல் நாள் கிளர்ச்சியில் ஈடுபட்ட மத்ரித் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1814
எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.
1815
டொலெண்டீனோ போரில் நேப்பில்ஸ் மன்னன் யோக்கிம் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.
1837
ஏதென்சு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
1855
அமெரிக்கர் வில்லியம் வாக்கர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 60 பேருடன் நிக்கராகுவாவைக் கைப்பற்றப் புறப்பட்டார்.
1860
பதினைந்தாம் சார்லசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.
1901
புளோரிடாவின் ஜாக்சன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.
1913
இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.
1920
சியார்சியாவில் போல்செவிக் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
1921
வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது.
1928
சீனா, சினானில் 12 ஜப்பானியப் பொது மக்கள் சீனப் படைகளினால் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக அடுத்தடுத்த நாட்களில் 2,000 வரையான சீனர்கள் படு கொலை செய்யப்பட்டனர்.
1939
சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.
1941
பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.
1945
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான் படை கேப் அர்கோனா, தீல்பெக், இடாய்ச்சுலாந்து ஆகிய சிறைக்கப்பல்களை தாக்கி மூழ்கடித்தது.
1962
டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
1973
சிக்காகோவின் 1,51 அடி உயர 108 மாடி சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
1978
முதலாவது எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அமெரிக்காவில் அனுப்பப்பட்டது.
1999
ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை பெரும் சூறாவளி தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமடைந்தனர்.
2001
1947 ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது.
2002
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜலந்தரில் இந்திய வான்படையின் மிக்-21 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து, 17 பேர் காயமடைந்தனர்.
2006
ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2016
கனடா, ஆல்பர்ட்டாவில் மெக்மரி கோட்டையில் தீ பரவியதில் 88,000 பேர் இடம்பெயர்ந்தனர். 2,400 வீடுகள் அழிந்தன.





