• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
May 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான ரூபாவை செலவழித்து கட்டிய குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகங்கள் காவல்துறையின் துணையுடன் அத்துமீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல இடங்களில் தொழிலாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதுடன், குடியிருப்புகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது அத்தியாவசிய உடைமைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் காவத்தை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

அச் சம்பவத்தையடுத்து மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.
ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களோ அல்லது தாக்குதல்களுக்கு காரணமான தரப்புகளுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளோ இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

இதுவே ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அநீதி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான முக்கிய காரணமாகக் காணப்படுகிறது.

அதேவேளை, அண்மையில் நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது தோட்ட நிர்வாகம் காவல்துறையின் உதவியுடன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்பு பிரேரணையை முன்வைத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், மலையக மக்களின் குடியிருப்புகள் மீது வெளிநபர்கள் அல்லது அதிகாரத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைத் தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த வாரம், பண்டாரவளை வெலிமடை பகுதியில் உள்ள டயாரபா தோட்டத்தில் பணியிடத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து, தோட்டத் தொழிலாளி ஒருவர் தோட்ட நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டுள்ள மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வீடு, தொழில், காணி உரிமை, சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினரால் முறையான விசாரணைகளும் நீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவலைக்கிடமான விடயமாகும்.

இருநூறு ஆண்டுகளாக பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இன்னும் நிரந்தரமான தீர்வுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தீர்வுகளை வலியுறுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

by Mathavi
May 25, 2026
0

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது. இச்செய்தியில்...

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

by Mathavi
May 25, 2026
0

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர்...

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

by Mathavi
May 25, 2026
0

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக...

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!

by Mathavi
May 25, 2026
0

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு...

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

by Mathavi
May 25, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து, முடிந்தால் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி