• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

Mathavi by Mathavi
May 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

முற்றிலும் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு தற்போதைய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவரான சுரேஷ் சலே எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா, தனது புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காகக் கூறிய கட்டுக்கதைகளையும் வாக்குமூலத்தையும் அடிப்படையாகக் கொண்டே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தற்போது சுரேஷ் சலேவைப் பிரதான சூத்திரதாரியாகச் சித்திரித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அவரே தாக்குதல்களை வழிநடத்தினார் என்பதும் இதற்கு முன்னர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நடத்தப்பட்ட பல்வேறு பாரிய விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள் ஊடாகத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், இப்போது திடீரெனப் புதியதொரு விடயத்தைக் நீதிமன்றத்தில் குறிப்பிடுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகும்.

தற்போதைய அரசு கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தை முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சபைக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் வழங்கிய போலி வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே அரசு தற்போது இவ்வாறு திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், 2019 இல் இந்தக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய உயர் பதவிகளில் இருந்துகொண்டு, தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்தான் இன்று புதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அன்று கடமையைச் செய்யத் தவறியவர்கள் இன்று பிறிதொரு நேர்மையான அதிகாரி மீது பழிசுமத்துவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும்.

எனவே, அரசியல் தேவைகளுக்காகப் புலனாய்வுத் துறை அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவதை நிறுத்தி, யதார்த்தமான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Posts

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

by Mathavi
May 25, 2026
0

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது. இச்செய்தியில்...

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

by Mathavi
May 25, 2026
0

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான...

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

by Mathavi
May 25, 2026
0

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக...

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!

by Mathavi
May 25, 2026
0

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு...

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

by Mathavi
May 25, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து, முடிந்தால் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி