• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

Mathavi by Mathavi
May 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!
Share on FacebookShare on Twitter

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று அந்தப் பொறுப்பை வழங்கினால் இந்த நொடியே அதனை நடைமுறைப்படுத்திக் காட்டத் தான் தயாராக இருப்பதாகவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சர்வஜன அதிகாரம் மற்றும் மெல்போர்ன் சொலிடாரிட்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “திலித்துடன் கைகோருங்கள்” எனும் விசேட மக்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மெல்போர்ன் அகேசியா வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய முதன்மையான பிரச்சினை டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள அழுத்தமே என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, அதனை முகாமைத்துவம் செய்வதற்கு முதலாவதாக மக்களுடன் உண்மையான மற்றும் நம்பிக்கையானதொரு உரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இன்று இந்நாட்டில் டொலர்கள் மட்டுமல்ல, நலிவடைந்துள்ள அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையுமே முற்றாகச் சீர்குலைந்துள்ளது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். உண்மையை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் சில மணிநேரங்களுக்குள்ளேயே மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை எம்மால் ஏற்படுத்த முடியும்.

எனது அரசியல் பயணம் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பமானது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்குப் பிறகு உருவான எங்களது புதிய அரசியல் இயக்கம், மௌபிம ஜனதா கட்சியாகவும் பின்னர் ‘சர்வஜன அதிகாரம்’ கூட்டணியாகவும் உருவெடுத்தது.

பாரம்பரிய அரசியல் கோட்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஒரு தொழில் முயற்சி சார்ந்த அரசை உருவாக்குவதே எங்களது இறுதி இலக்காகும்.

நாட்டின் தேசியத்தையும், பௌத்த நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேசியவாதமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது. இது எவ்வகையிலும் இனவாதமல்ல, மாறாக நாட்டைத் தட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாகும்.

பாடசாலைக் கல்வியிலிருந்து நாடாளுமன்றம் வரை, இளைஞர்களைப் புத்தாக்கத்துடன் சிந்திக்கும் மற்றும் இடர்பாடுகளை முகாமைத்துவம் செய்யக்கூடிய தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும்.

சர்வதேச அரசியல் மற்றும் நிதி நிறுவனங்களின் செல்வாக்குக்கு அடிபணியாமல் நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதுதான் தற்போதைய பெரிய சவாலாக உள்ளது. அதனை முறியடிப்பதற்கான ஆளுமையும், அறிவும் என்னிடம் இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மட்டுமே நாம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. நாம் அவர்களுடன் சமநிலையில் பேச்சு நடத்தி, எமது நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடன் தொகைகளை வழங்குபவர்களைக் காட்டிலும், கடன்பட்ட நாடாகிய நாம் எந்தளவுக்குப் பலமான நிலையில் பேச்சுகளை முன்னெடுக்கின்றோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. அந்த வலிமையும் ஆளுமையும் கொண்ட தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை.

எங்களது சர்வஜன அதிகார சபையின் ஊடாகக் கிராமப்புற மட்டங்களில் மக்களைத் திரட்டி, வெறும் அரசியல் பிரசாரங்களை மட்டும் முன்னெடுக்காமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் மூலதன உதவிகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் ஏற்கனவே 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பல புதிய தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.

தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், இலங்கை மீது பற்றுறுதியுடனும் நேசத்துடனும் இருக்கும் மெல்போர்ன் வாழ் இலங்கையர்களின் இந்த அக்கறை, எதிர்காலத்தில் ஒரு தொழில்முயற்சி சார்ந்த இலங்கையை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாகவும் பெரும் சக்தியாகவும் அமையும்.” – என்றார்.

Related Posts

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

by Mathavi
May 25, 2026
0

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது. இச்செய்தியில்...

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

by Mathavi
May 25, 2026
0

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர்...

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

by Mathavi
May 25, 2026
0

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக...

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!

by Mathavi
May 25, 2026
0

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு...

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

by Mathavi
May 25, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து, முடிந்தால் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி