1851
கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1946
இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.
1808
மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814
முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
1889
எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின்படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1906
இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்சில் இடம்பெற்றது.
1933
கிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1941
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஈராக்குக்கு எதிரான இராணுவப் புரட்சியை அடுத்து பதவியை இழந்த இளவரசர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் இருத்த ஐக்கிய இராச்சியம் ஆங்கிலேய – ஈராக்கியப் போரை ஆரம்பித்தது.
1945
இரண்டாம் உலகப் போர்: பெர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜேர்மனியப் படை இத்தாலியில் சரணடைந்தன.
1945
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் வான்படையினர் ஜேர்மனியில் வோபெலின் வதைமுகாமை விடுவித்தனர். இங்கு 1,000 கைதிகள் இறந்து காணப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: டச்சு கைதிகள் முகாமில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கைதிகளை பவேரியாவில் வழிமறித்த அமெரிக்க இராணுவம் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தது.
1952
உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, தனது முதல் பறப்பை லண்டனில் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கு மேற்கொண்டது.
1964
வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964
8,027 மீட்டர் உயர சிசாபங்மா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1972
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நிலத்தடி சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 91 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1982
போக்லாந்து போர்: பிரித்தானியாவின் கொன்கரர் என்ற அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் அர்கெந்தீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1986
செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆறு நாட்களின் பின்னர் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
1989
பனிப்போர்: அவுஸ்திரேலியாவுடனான எல்லையை அங்கேரி திறந்து விட்டதில் பெருந்தொகையான கிழக்கு ஜேர்மனி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1994
போலந்து, கதான்ஸ்க் நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
1998
ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
2002
கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004
நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறித்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006
குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2008
சூறாவளி நர்கீஸ் மியன்மாரில் தரை தட்டியதில் 138,000 பேர் உயிரிழந்தனர்.
2011
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமானவரும், சிஐஏ இனால் தேடப்பட்டு வந்தவருமான உசாமா பின் லாதின் பாகிஸ்தானில் ஆப்டாபாத் நகரில் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
2011
ஈ.கோலை தொற்றுநோய் ஐரோப்பாவை, முக்கியமாக ஜேர்மனியைத் தாக்கியதில் 30 பேர் வரை உயிரிழந்தனர்.
2012
நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச் வரைந்த அலறல் என்ற ஓவியம் நியூயார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் $120 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
2014
ஆப்கானித்தான் பாதக்சான் நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 2,500 பேர் காணாமல் போயினர்.
2018
பாஸ்கு விடுதலைக்கான தீவிரவாத அமைப்பு எட்டா முழுமையாகக் கலைந்தது.




