பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் நேற்றையதினம்(10) பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ADVERTISEMENT
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.