ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹம்பஸ்வலனை, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பேருந்தின் முன்பக்க மிதிப்பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்தில் இருந்து விழுந்துள்ளார்.
அதன் பின்னர் அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில், இறந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.