கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல் தேர்வத்தாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டு பணங்களோ வேட்புமனுக்களோ செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தேர்வத்தாட்சியும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய எஸ். முரளிதரன் அவர்கள் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
மேலும் கருத்து தெறிவிக்கையில், வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்று அறிவித்துள்ளது.
இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.