இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 06 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
06 இந்திய மீனவர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேற்படி 06 இந்திய மீனவர்களும் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்.