பொத்துப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினாவத்த பகுதியில் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகராறு வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெத்தகல, கலவான பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வசித்து வந்த பெண்ணொருவர் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.காதலர் தின இரவில், அந்தப் பெண்ணும் அவளுடைய காதலனும் வீட்டில் இருந்தபோது, அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கணவர் அங்கிருந்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த பெண் பயந்து வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நபர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.