• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

Mathavi by Mathavi
February 14, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0 0
0
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் திரு சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 11.02.2025 அன்று பாடசாலையின் பிரதான வாயில் முன்பாக நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து நடாத்திய போராட்டத்தில் “பொறுப்பேற்ற அன்று பாடசாலை முன் வீழ்ந்து வணங்கினாய். பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யவா அந்த நாடகம், அதிபர் சி.நாகேந்திரராவின் 2010 தொடக்கம் இன்று வரையான மோசடிகளுக்கு ஆதாரங்களை தருகிறோம். நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாரா? , பொன்விழாவை குழப்பிய அதிபரே உடன் வெளியேறு, மாகாண கல்வி அமைச்சே! தகுதி இல்லாதவனை அதிபராக்கி மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?, செய்யாதே செய்யாதே அரச சொத்துக்களை ஊழல் செய்யாதே, பாலியல் துஸ்பிரயோக குற்றத்தில் ஆசிரியராக வெளிமாவட்ட இடமாற்றம் பெற்று வந்தவரை பிரதி அதிபராக்கி மாணவர்களது எதிர்காலத்தை அழிக்காதே!, மாகாண கல்வி அமைச்சே ஊழல் நிரூபிக்கப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, மோசடியில் மூழ்கிய அரக்கனே எமது பாடசாலையிலிருந்து உடனே வெளியேறு, வேண்டாம் வேண்டாம் அதிபர் நாகேந்திரராசா எமது பாடசாலைக்கு வேண்டாம், அதிபர் நாகேந்திரராசாவின் மோசடிகளுக்கு அரசியல்வாதிகளே தலையிடாதீர்கள், 10 இலட்சம் பெறுமதியான கணனி உட்பாகங்கள் எங்கே, அதிபர் நாகேந்திரராசாவின் கடந்தகால மோசடிகளுக்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்” என பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்ட இடத்திற்கு வருகைதந்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரிடம் போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி, பிரதமர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வு திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் என பல்வேறு தரப்பினருக்கும் தபால் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா மீது நிர்வாக சீர்கேடுகள் நிதி, சொத்து மோசடிகள் என 36 விடயங்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த அதிபருக்கு மாகாண கல்வி அமைச்சினால் 6 விடயங்களுக்கு மட்டுமே குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணையானது கண்துடைப்பு விசாரணையாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் ஊழலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அதிபருக்கு சார்பாக செயற்படும் சிலர் போராட்டத்தை குழப்புவதற்கு முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களால் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட 36 விடயங்களையும் உள்ளடக்கியே விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதுடன் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டும் குறித்த அதிபர் பாடசாலையில் கடமையாற்றும்போதே முறைமைசார் விசாரணை நடைபெறுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டோரால் வழங்கப்பட்ட மகஜரில் குறித்த அதிபரின் ஊழல் முறைகேடுகள் உள்ளடங்கிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் 2010 தொடக்கம் இன்றுவரை அதிபராக கடமையாற்றிய பாடசாலைகளில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு கடந்தகால மோசடிகளில் காப்பாற்றப்பட்டதை போன்று காலம் கடத்தப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதால் குறித்த அதிபரால் எமது பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அரச சொத்து ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காப்பாற்றப்படும் என்பதாலும் எமது பாடசாலையின் வளங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்பதாலும் குறித்த அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

குறித்த அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களை எமது பாடசாலையிலிருந்து வெளியேற்றி எமது பாடசாலைக்கு தகுதியான அதிபர் ஒருவரை நியமிப்பதுடன் அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் கடமையாற்றிய அனைத்து பாடசாலைகளிலும் அபிவிருத்திச் சங்க கணக்குகள், பாடசாலை சொத்துக்கள், பாடசாலைக்கு சொந்தமான காணிகளின் விவசாய குத்தகை வருமானங்களை மீள் கணக்காய்வு செய்து அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கு ஆவண செய்வதுடன் வீழ்ச்சியடைந்து செல்லும் எமது பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காகவும், எமது பாடசாலையின் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களை எமது பாடசாலையிலிருந்து உடன் வெளியேற்றி உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் தற்போது...

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      by Thamil
      May 30, 2025
      0

      "வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில்...

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      by Thamil
      May 30, 2025
      0

      "ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா?...

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      "தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா?" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை...

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட...

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      நுவரெலியா பிரதேச செயலகத்தின் இயங்கும் பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் பம்பரக்கலை இப்பகுதிக்கு...

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

      Load More
      Next Post
      ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான வேன்.! (சிறப்பு இணைப்பு)

      ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான வேன்.! (சிறப்பு இணைப்பு)

      வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

      வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

      எத்தனை வழக்குகள் வந்தாலும் மண் மீதான காதல் மாறாது; வேலன் சுவாமிகள் தெரிவிப்பு.!

      எத்தனை வழக்குகள் வந்தாலும் மண் மீதான காதல் மாறாது; வேலன் சுவாமிகள் தெரிவிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி