தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நீரை பாதுகாப்போம் என்னும் கருப்பொருளில் வல்லிபுரம் நீர் உள்ளெடுப்பு நிலையத்தில் மருத மரம் நாட்டும் நிகழ்வு நேற்று 08.02.2025 இடம்பெற்றது
காலை 09.00 மணியளவில் செ.சிறிநிவாசன் தலைமையில் குறித்த நிகழ்வு தேவார பாராயணத்துடன் ஆரம்பமானது.100 மருத மரங்களும் நாட்டப்பட்டன
இந்நிகழ்வில் யாழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் வே.உதயசீலன்,யாழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி த.யசோதரன்,பருத்தித்துறை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி கு.மணிவண்ணன்,கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியர் பாக்கியநாதன்,ஆகியோர் கலந்து கொண்டனர்