• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Bharathy by Bharathy
December 30, 2024
in இலங்கை செய்திகள்.
0
ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!
Share on FacebookShare on Twitter

கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக திரு வினாசித்தம்பி சிவனேசன் பாடசாலை அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழி நடத்தி கொட்டடி சமூகத்தை ஏமாற்றி மிக மோசமான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை சமூகத்தை ஏமாற்றி ஊழல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அதிபர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாம் கௌரவ ஆளுநருக்கு 27ஃ12ஃ2022இல் எழுத்து மூலம் அறிக்கையிட்டிருந்தோம். அதன் பிரதிகள் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.

எனினும் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் எமது கோரிக்கை முறையான விதத்தில் விசாரிக்கப்பட்டு நியாயமான தீர்வு இன்று வரை வழங்கப்படவில்லை.

அதிபர் தொடர்பாக நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகள்

இப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு சமைத்த உணவையே பெற்று கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும் இலைக்கஞ்சியே தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி முறைப்பாடு செய்த பெற்றோர்கள் அதிபரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் உணவு கணக்கை பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பின்னரும் பிரதி அதிபரே தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்உணவு கணக்கு தொடர்பாக ஆசிரியர்கள் கேள்வியெழுப்பியமையால் குறித்த உணவு கணக்கு அறிக்கை அதிபரால் காணாமலாக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலகத்தினாலும் பனை அபிவிருத்தி சபையினாலும் பால் வழங்கப்பட்டு வந்துள்ளது. குறித்த ஒரு நாளில் பாடசாலை ஆசிரியர் கடையிலிருந்து 10 லீற்றர் பாலை பெற்றுக் கொள்வதற்காக சென்றபோது 5 லீற்றர் பால் வேறொருவரால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை வெளிப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான செயலட்டைகளை போட்டோ கொப்பி எடுப்பதற்கு ரோணர் முடிந்துவிட்டதென தொடர்ச்சியாக கூறி வந்த அதிபர், வருட இறுதியில் பாடசாலையின் கொள்வனவு குழு மதிப்பீட்டுக் குழுக்களின் சிபாரிசு இல்லாமலே ரோணரை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்து அந்த படிவங்களில் கையொப்பம் இடும்படி ஆசிரியர்களை வற்புறுத்தியுள்ளார். ரோணருக்கான பற்றுச் சீட்டு வவுச்சர் என்பவற்றின் திகதிகள் முரண்பாடாக உள்ளன.

இதுவரை காலமும் பாடசாலை கணக்குகளில் மாற்றபடாத காசோலை பயன்படுத்தப்படாது தொடர்ச்சியாக சாதாரண காசோலையே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

2022இல் ஆங்கில பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பாடசாலை தரிசிப்புக்கு வந்த சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆங்கிலபாடம் கற்பிக்கின்ற தாய்மை அடைந்த நிலையிலிருந்தபெண் ஆசிரியரை மலசல கூடத்தில் வைத்து அதிபர் பூட்டியுள்ளார். நீண்ட நேரத்தின்பின் ஆசிரியரின் அலறல் சத்தம்கேட்டு ஏனைய ஆசிரியர்கள் வலய கல்விப் பணிமனைக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு குறித்த ஆசிரியர் மயங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டார் மறுநாள் அப்போது வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு மாணிக்கராசா அவர்கள் விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை சமாதானம் செய்து விடயத்தை வெளியே தெரியாது மூடி மறைத்து அதிபரை காப்பாற்றியுள்ளார். மன உளைச்சலுக்கு உள்ளான அந்த ஆங்கில பாட ஆசிரியர் பாடசாலையின் சேவை காலம் முடிவடைவதற்கு முன்னரே இடமாற்றம் கோரி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளார்.

வரலாறு பாடம் கற்பிக்கும் பெண் ஆசிரியரை மாணவர்கள் முன்னிலையில் அதிபர் மிக அருகில் சென்று தன் கையினால் அடிக்க முற்பட்ட போது ஆசிரியர் பின்பக்கமாக நகர்ந்து தப்பித்துள்ளார். அவர் மன உளைச்சலால் பெரிதும் பாதிப்படைந்திருந்தமையால் ஆசிரியருக்கு நீதிவேண்டி பாடசாலையின் சகல ஆசிரியர்களாலும் ஒப்பமிடப்பட்ட முறைப்பாடு வலயக்கல்விப் பணிப்hளரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் அம்முறப்பாட்டிற்கான விசாரணை நடைபெறவில்லை.

இப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவுக்கு 125,000 ரூபாவும் வர்ணம் பூசுவதற்காக 75,000 ரூபாவும் பழைய மாணவர்களிடம் அதிபர் தனிப்பட்ட ரீதியாக பெற்றிருக்கிறார். அந்த பணம் இன்றுவரை எங்கே என்பது தெரியவில்லை.

அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் பெற்றோர் தமது பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் இணைப்பதால் பாடசாலை மாணவர்களது எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015இல் 400 மாணவர்களாக இருந்த தொகை இவ்வருடம் (2022) 202 ஆக குறைவடைந்துள்ளது.அதிபரின் ஊழல்களை தட்டிக்கேட்ட பெற்றோரின் பிள்ளைகள் வேறு பாடசாலைகளுக்கு நாசூக்காக விரட்டப்பட்டுள்ளனர்.பாடசாலையின் ஊழலை தட்டி கேட்கின்ற அல்லது தன் ஊழலுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்ற ஆசிரியர்களுக்கு வலயம் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டமையே இப் பாடசாலையின் வரலாறாக காணப்படுகிறது.

பாடசாலையின் வழிகாட்டியாக விளங்க வேண்டிய அதிபர் பரிசளிப்பு விழா ஒன்றில் மேலைத்தேய பாணியில் அநாகரிகமான பெண் ஆடையுடன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தவறான வழிப்படுத்தலை வழங்கி உள்ள சம்பவம் பெற்றோரிடையே பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இத்தகைய அநாகரிகமான உடையில் கலந்து கொண்டு பாடசாலையின் கலை விழாவில் அவர் மாணவர்களோடு ஆடிய நடனக்காட்சி சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது.

அதிபரின் அடாவடித்தனமான அநாகரிமான செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக்கல்வி வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள் மட்டத்தில் தெரிந்திருந்தும் அதிபருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படாமல் இருப்பது பாடசாலை சமூகத்துக்கும் கொட்டடி மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை தருவதாக உள்ளது.2015இல் அதிபராக கடமையைப் பொறுப்பேற்ற இவர் 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு அடைந்துள்ளார். அதன் பின்னரும் இவரை இப்பாடசாலையில் அதிபராகப் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் இலக்குடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தற்போதைய அரசிடம் சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க பொருத்தமான தீர்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.எனவே மீண்டும் விசாரணை குழுவை நியமித்து எமக்கு நியாயமான தீர்வினை பெற்றுத் தரும்படி தங்களைவேண்டி நிற்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தினை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்…..file:///C:/Users/DELL%20Latitude%207450/Downloads/DOC271224-27122024100428.pdf

Related Posts

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 25, 2026
0

திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே...

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொ*லை வழக்கு குற்றவாளி உயிர்மாய்ப்பு.!

by Mathavi
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

by selvan
May 25, 2026
0

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனத்தைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி நகர...

அரசின் இயலாமையால் சகல துறைகளும் முடக்கம் – நாமல் சாடல்!

by selvan
May 25, 2026
0

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 24, 2026
0

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளி மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி