• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

admin by admin
September 5, 2024
in உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0
கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 
Share on FacebookShare on Twitter

கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் போட்டியில் முழுமையாக எதிர்த்தாடும் உத்தியுடன் விளையாடி வெற்றிபெறுவதே இலங்கை அணியின் குறிக்கோள் என இலங்கை கால்பந்தாட்ட அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிக்கு முன்பதாக இலங்கை கால்பந்தாட்ட இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் எவ்வாறு இலங்கை இரசிகர்கள் சிங்கக் கொடியை ஏந்திக்கொண்டு அணியை உற்சாகப்படுத்தகிறார்களோ அதேபோன்ற கலாசாராம் கம்போடியாவுடனான போட்டி முடிவுடன் கால்பந்தாட்டத்திலும் உருவாகி அவர்கள் கால்பந்தாட்டத்தை நேசிக்கத் தொடங்குவார்கள் எனவும் அல் முத்தய்ரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

‘கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெறுவதாக இருந்தால் ஆக்ரோஷத்துடன் விளையாடவேண்டும். எனவே இலங்கை வீரர்களுக்கு எதிர்த்தாடும் (Attacking) கால்பந்தாட்ட உத்தியை நான் பயிற்றுவித்துள்ளேன். போட்டிகளின்போது அச்சம் கொள்ளக்கூடாது, நம்பிக்கையுடன் விளையாடவேண்டும். அந்த நம்பிக்கை 100 க்கு 1000 வீதமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன்  சிறந்த வியூகங்கள், பந்துபரிமாற்றங்களுடன் விளையாடவேண்டும்.

‘அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரிடமும் இலங்கை இரத்தமே ஓடுகிறது. அவர்கள் எங்கு பிறந்தார்கள், எங்கு விளையாடுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இலங்கையர்களான அவர்கள் ஒன்றிணைந்து விளையாடும் போது அவர்கள் அனைவரும் அரங்குக்குள் சிங்கங்கள். எனவே இன்று முதல் தேசிய கால்பந்தாட்டத்தில் ஒரு மாற்றத்தை, உத்வேகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். மேலும் கிரிக்கெட்டை இலங்கை இரசிகர்கள் நேசிப்பது போன்று கால்பந்தாட்டத்தையும் இன்றைய போட்டியின் பின்னர் நேசிக்க ஆரம்பிப்பார்கள்

‘உள்ளூர் போட்டிகள் நடைபெறாதது தேசிய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இன்று உலகக் கால்பந்தாட்ட அரங்கில் இங்கிலாந்தில்தான் அதிசிறந்த முதல் தர கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. ஆனால், 1966க்குப் பின்னர் இங்கிலாந்தினால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டிகள் நடைபெறாதபோது கழக மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் வீரர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடவேண்டும். அவர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை போட்டிக்கு போட்டி புகட்டத்தேவையில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளேன்’ என்றார்.

இதேவேளை, கம்போடியாவுடனான போட்டியில் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே தமது குறிக்கோள் என அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

‘இலங்கை அணியில் சில காலமாக ஒரே வீரர்கள் விளையாடி வருவதால் சிறந்த புரிந்துணர்வுடனும் வெற்றிபெறும் குறிக்கோளுடனும்  கம்போடியாவை எதிர்கொள்ளவுள்ளோம். எட்டு வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவிடம் எனது தலைமையில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,  தற்போது இலங்கை அணியில் மிகத் திறமையான வீரர்கள் இடம்பெறுவதால் எம்மால் சாதிக்கக்கூடியதாக இருக்கும்’ என சுஜான் பெரெரா மேலும் தெரிவித்தார்.

இலங்கையும் கம்போடியாவும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மோதிக்கொண்டதுடன் 2001இல் 1 – 0 என இலங்கையும் 2016இல் 4 – 0 என கம்போடியாவும் வெற்றிபெற்றிருந்தன.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் கம்போடியா 180ஆவது இடத்திலும் இலங்கை 205ஆவது இடத்திலும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், உலக தரவரிசை வெறும் இலக்கங்கள் எனவும் போட்டியின்போது எந்த  அணி மிகச் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும்  எனவும்  ஆர்ஜன்டீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்போடிய அணி பயிற்றுநர் பீலிக்ஸ் டல்மாஸ் தெரிவித்தார்.

‘நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. மேலும் இலங்கை அணியில் வெளிநாடுகளில் விளையாடும் வீரர்கள் இடம்பெறுவதால் எமது அணி பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்’ என்றார் அவர்.

இதே கருத்தையே கம்போடிய அணித் தலைவர் தியெரி ஷந்தான் பின் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டி கம்போடியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.                  

Related Posts

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

by selvan
June 28, 2026
0

ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக தனது...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 27, 2026
0

ஆப்கானிஸ்தானில் சற்று நேரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்னிடியூட் அளவுக் கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக...

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் எயார் வேய்ஸுக்கு கடும் விமர்சனம்!

by selvan
June 26, 2026
0

பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார் வேய்ஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது...

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

by selvan
June 26, 2026
0

அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக...

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!

by selvan
June 26, 2026
0

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும்...

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!

by selvan
June 26, 2026
0

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇதற்கமைய, பிரான்ஸ்...

ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 26, 2026
0

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

by selvan
June 26, 2026
0

ஹோர்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட...

ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்தியது ஐ.நா!

by selvan
June 26, 2026
0

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது.ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக...

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

by selvan
June 26, 2026
0

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas)...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி