27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் பொலிசாரால் சுருக்குவலை பறிமுதல்-வலையை திரும்ப பெற கடும் முயற்சி

மருதங்கேணி பொலிசாரால்  கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை  கைப்பற்றப்பட்டுள்ளது 

சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்டுள்ளது.

கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது தடவையாக மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத சுருக்குவலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர் 

கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினமும் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குவலையை திரும்ப பெறுவதற்காக சட்டவிரோத தொழிலாளர்கள் சிலர் முயற்சிப்பதாகவும் நீதிமன்றில் முற்படுத்தி கைப்பற்றப்பட்ட வலைகளை எரியூட்டுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

Related posts

மலையகத்தில் ஒரே இரவில் இரண்டு வர்த்தக நிலையங்களை சூறையாடிய திருடர்கள்..!

sumi

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு!

sumi

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}

sumi

Leave a Comment