வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார்.
மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.
வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கு முன்னால் அவர் மயங்கிய நிலை காணப்பட்டதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.