28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

குடும்ப தகராறில் இளம் மனைவி கணவனால் கொலை-இலங்கையில் சம்பவம்..!

மிகிந்தலை பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்றிரவு குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை, கெலே திரப்பனய, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

23 வயதுடைய இளம் மனைவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

User1

வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா 2024

User1

விஜய்யை சந்திக்க ராஜபக்‌ச குடும்பம் ஆர்வம்

sumi