28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த  குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார்.

35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்  இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கிய நிலையில் சந்தேக நபர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

User1

பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

sumi

வடக்கில் மிக பிரமாண்டமாக இடம்பெற்ற தென்மராட்சி பண்பாட்டு பெருவிழா…!

User1