28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

ஐவர் சுட்டு படுகொலை: ஒருவர் கைது வாகனமும் சிக்கியது

பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றத்தை புரிவதற்காக வந்தவர், வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என மேலும் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அம்பலாங்கொடையில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் பலி

User1

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

User1

சிறுவன் மரணம் – சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்.

sumi

Leave a Comment