• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு

Thinakaran by Thinakaran
January 5, 2024
in இலங்கை செய்திகள்., நாட்டு நடப்புக்கள்
0
Share on FacebookShare on Twitter

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புலாகல, சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையொருவரே தற்போது தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரியவருகின்றது.

நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள், மாலபே, காஹன்தொட்ட பகுதியில் டிசம்பர் 30 ஆம் திகதி அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர் குறித்த பெண்ணின் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இறுதிக்கிரியைகள் டிசம்பர் 29 ஆம் திகதி நடந்துள்ளன.

இந்தநிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 46 வயது நபர் (மேற்படி குடும்பத்தின் தலைவர்) மத போதனைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். மரணம் பற்றியே அவர் போதனைகளின்போது அதிகம் பேசியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களிலும் உள்ளன.

இவரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்றிருந்த 35 வயது இளைஞர் ஒருவரும், 21 யுவதி ஒருவரும் ஜனவரி 3 ஆம் திகதி இரு வேறு இடங்களில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. மேற்படி நபரின் போதனைகளில் இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. அத்துடன், இறுதிக்கிரியைகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி நபரின் (ருவான் பிரசன்ன குணரத்ன) போதனைகளில் பங்கேற்ற மற்றுமொருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் தனது மனைவி சகிதம் இறுதிக்கிரியைகளுக்கு சென்றுள்ளார். இந்த தகவலை அவரின் தந்தை உறுதிப்படுத்தியுள்ளார் என தொலைக்காட்சியொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ருவான் பிரசன்ன குணரத்ன தற்கொலையை தூண்டும் விதத்தில் தவறான கருத்தை அவர் விதைத்துள்ளார் என புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நஞ்சு – இரசாயனம் என்ன வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் இரசாயன பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது. அது சயனைட்டாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அந்த இரசாயனத்தை ருவான் பிரசன்ன குணரத்ன வழங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் போதனைகளில் எவரேனும் பங்கேற்றிருந்தால் அவர்கள் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, ருவான் பிரசன்ன குணரத்ன விவகாரம் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். அவரின் பின்புலம் பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது. அவருக்கான நிதி மூலங்கள் பற்றியும் விசாரணைகள் தொடர்கின்றன.

குறிப்பு – ( தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. மூட நம்பிக்கைக்கு அடிபணிந்து தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமான முடிவாகும். பொறுப்பும், பொதுநலன் கருதியுமே இந்த செய்தி பதிவிடப்படுகின்றது. )

Tags: ‘மதபோதனை’“genshinnewssuicideதற்கொலைதொடர்வதால்நடப்புக்கள்நாட்டுபரபரப்புமுயற்சி

Related Posts

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

by Mathavi
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இவ்விபத்துச் சம்பவம் குருநாகல்,...

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும்...

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 26, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி