உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழில் பெண் உறுப்பினுள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த 4 பெண்கள் கைது

இலங்கை செய்திகள் 3 ஆண்டுகள் முன்
23 பார்வைகள்

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 5 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள்.

இந்த 4 பேருமே, துன்னாலை, குடவத்தை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் 4 பேரும் தமது அந்தரங்க பாகங்களில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்துள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்புக்களில், பெண் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால், 4 பெண்களும் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று மாலை பொலிசார் நடத்திய சோதனையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

45 வயதான அந்த பெண்ணை கைது செய்த போது, 680 மில்லிகிராம் ஹெரோயினும் அவரது உடலின் அந்தரங்க பகுதிகளிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

கைதான பெண்ணிடமிருந்து 19 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டது. போதைப்பொருள் வாங்குபவர்கள், பணமில்லாத பட்சத்தில் அந்த தொலைபேசிகளை அடகு வைத்து போதைப்பொருள் வாங்கியுள்ளனர். அந்த தொலைபேசிகளே சிக்கின.

அத்துடன், போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த ரூ.678,900 பணமும் கைப்பற்றப்பட்டது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0