28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 32 இலட்சம் பெறுமதியான 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராதிபுரம் பகுதியில் போதை ஒழிப்பு விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது .

விசேட நடவடிக்கையில் கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிஸார் போதைப்பொருள் கடத்தல் தொடர் பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மனு

sumi

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

sumi

யாழில் தன்னை கருணை கொலை செய்யுமாறு முதியவர் ஒருவர் கோரிக்கை

User1

Leave a Comment