• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.!
Share on FacebookShare on Twitter

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படும் மோசமான தாக்கங்களைக் குறைத்துக் கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களுடன் அவசர கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெட்ரோபொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ, சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் வித்தாரண, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம பொருளாதார அதிகாரி ஹசிதா விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட சுற்றாடல் நிபுணர் நதீர ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
“எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நிபுணர்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை, காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் நாடாளுமன்றத்தின் அவசர கவனத்துக்குக் கொண்டு சென்று, நாட்டின் தேசிய கொள்கை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன். நான் இந்த நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராகச் செயற்படுவதால், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் தலையிடத் தயாராகவுள்ளோம்.

பசிபிக் பெருங்கடலின் நீரின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்த மாறுபாடுகள் காரணமாகவே ‘தெற்கு சுழற்சி’ என அழைக்கப்படும் இந்தக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எல் நினோவின் போது கடல் நீர் வழமைக்கு மாறாக அசாதாரணமாக வெப்பமடைகின்றது. ‘லா நினா’வின் போது அது வழமையை விட குளிர்ச்சியடைகிறது. இந்த உலகளாவிய வானிலை மாற்றங்களால் வறட்சி, கடுமையான வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி வீழ்ச்சி போன்ற பாரிய நெருக்கடிகள் இலங்கையிலும் ஏற்படக்கூடும்.

கடந்த 1982, 1997-1998 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ‘எல் நினோ’ நிலைமைகள் காரணமாக சர்வதேச ரீதியாகப் பாரதூரமான காலநிலை நெருக்கடிகள் உருவானதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்முறை உலக அளவில் ‘சுப்பர் எல் நினோ’ நிலைமை ஏற்படுவது குறித்து சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்தால், நடப்பு 2026 அல்லது வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை மட்டம் ஆபத்தான குறிப்பிட்ட எல்லையைத் தாண்டக்கூடும் எனப் பல கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலை உலக மக்களின் கலோரி தேவையில் சுமார் 60 வீதத்தைப் பெற்றுத் தரும் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சோயா போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும். இதன் மூலம் உலக அளவில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இத்தகைய காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உட்கட்டமைப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்காக நாம் இப்போதிருந்தே போதிய தயார் நிலையையும், காலநிலை நெகிழ்ச்சித் திறனையும் அதிகரித்துக்கொள்வது மிக அத்தியாவசியமானதாகும்.” – என்றார்.

Related Posts

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருதரப்பினரிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் சிறைச்சாலை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோணி" என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர்...

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

by Mathavi
July 5, 2026
0

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல்...

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

by Mathavi
July 5, 2026
0

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 12 ஆவது நாளை...

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

by Mathavi
July 5, 2026
0

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும்...

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
July 5, 2026
0

மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தக்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

by Mathavi
July 5, 2026
0

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (5) கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி