• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!
Share on FacebookShare on Twitter

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நமது நாட்டின் அரசமைப்புக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய பிரதான மூன்று தூண்கள் காணப்படுகின்றன. அதேவேளை, சுதந்திர மற்றும் சுயாதீன ஊடகத்துறை அதன் நான்காவது தூணாகவும், ஐந்தாவது தூணாக சிவில் சமூக இயக்கமும் விளங்கி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முதன்மைச் சக்தியாக அமைய வேண்டும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த சிவில் சமூக இயக்கங்களினதும் அமைப்புகளினதும் தனித்துவமான நோக்கங்கள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், அவை அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணிப்பதே இன்றைய தேவையாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இத்தகையதொரு தேசிய பணிக்கான வேலைத்திட்டத்துக்கு நாம் அடித்தளம் அமைப்போம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இந்த விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

உரிமைகள் குறித்து ஜனநாயக முறைமையின்படி பேசும்போது, சில தரப்பினர் தாராளவாத வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டு, அது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்கின்றனர். அதேநேரம், இடதுசாரிப் பிரிவினர் அதன் பெரும்பகுதியைப் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி உரிமைகளுக்கே வழங்குகின்றனர். ஆனால், இந்த அனைத்து உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் மூலம் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

எனவே, நடுத்தரப் பாதையைக் கொள்கையாக நம்பும் ஐக்கிய மக்கள் சக்தி, வலதுசாரிகளும் இடதுசாரிகளும் சுட்டிக்காட்டும் அனைத்து உரிமைகளையும் சமமாக முன்னிறுத்தி முன்னோக்கிச் செல்வதே பொருத்தமானது என நம்புகின்றது.

இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித கட்சிப் பாகுபாடும் கிடையாது. அனைவரினதும் முற்போக்கான கருத்துக்களுக்கும் இதில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் போன்றே பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி மற்றும் நலன்புரி போன்ற அனைத்து உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பலமிக்க தேசிய அமைப்பை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம். இதற்காக அனைத்துச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எங்களுடன் கைகோர்க்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.” – என்றார்.

Related Posts

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

by Mathavi
July 5, 2026
0

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல்...

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

by Mathavi
July 5, 2026
0

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 12 ஆவது நாளை...

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
July 5, 2026
0

மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தக்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

by Mathavi
July 5, 2026
0

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (5) கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

by Mathavi
July 5, 2026
0

கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த...

டெங்கு அச்சுறுத்தலால் மிஞ்சியது மருத்துவமனைகளின் கொள்ளளவு.!

டெங்கு அச்சுறுத்தலால் மிஞ்சியது மருத்துவமனைகளின் கொள்ளளவு.!

by Mathavi
July 5, 2026
0

இலங்கையில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்களும், மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் நிலைமை தீவிரமடைந்து மருத்துவமனைகளின் கொள்ளளவும் மிஞ்சியுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகள்...

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு...

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி.!

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி.!

by Mathavi
July 5, 2026
0

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது. இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியானது சாவகச்சேரியில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி